நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிபரவி வரும் நிலையில் இதுகுறித்து ஆர் கே செல்வமணி விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : ‘நானே வருவேன்’ பொன்னியின் செல்வன் பிரெஸ் மீட்டில் தனுஷ் படத்தை கலாய்த்த பார்த்திபன். வைரலாகும் வீடியோ இதோ.

ரோஜா அரசியல்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரோஜா குடும்பம் :

கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரியில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் போன்ற பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே, இவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆவார்.

Advertisement

துருவ் விக்ரமுக்கு ஜோடியா :

இந்நிலையில் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் அந்த படத்தின் கதாநாயகியாக ரோஜாவின் மகள் அன்சுமாலிகா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் பரவி வந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள செல்வமணி ‘அவளுக்கு சிறுவயதில் இருந்தே சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். மகன் மற்றும் மகள் மீது எங்கள் விருப்பத்தை திணிக்கும் பெற்றோர்களாக நானும் ரோஜாவும் இருந்தது கிடையாது.

மகளின் கனவு :

12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றி வைத்தோம். தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றிருக்கிறார். இன்னும் நான்கு வருடங்கள் அங்கு தான் இருப்பாள். அதனால் அவர் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பதெல்லாம் முற்றிலும் வதந்தி தான். ஒருவேளை நான்கு வருடங்கள் கழித்து அவள் சினிமாவில் நடித்த ஓகேவா என்றால், நானும் எனது மனைவியும் சினிமாவில் இருந்தவர்கள், ஒருவேளை அவள் நடிக்க விருப்பப்பட்டால் நாங்கள் நடிக்க அனுமதிப்போம். ஆனால், இப்போதைக்கு அவளுக்கு நடிப்பதில் விருப்பமில்லை சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவளது கனவு’ என்று கூறியுள்ளார்.

Advertisement