தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்ற இணைக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் தன மாபெரும் துருவ நட்சத்திர நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

வெகுஜன ரசிகர்களை தாண்டி இவர்கள் இருவருக்கும் பல்வேறு சினிமா துறை பிரபலங்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்களைபற்றி இவர்களுடன் பணியாற்றிய நடிகர்களும், நடிகைகளும் பல சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

இவர்களுடன் இருவருடன் பணியாற்றிவிட வேண்டும் என்று பல இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்கிய பெருமை இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவிற்கு இருக்கிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஜே சூர்யாவிடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா, 
தல புயலாக வாழும் தென்றல், தளபதி தென்றலாக வாழும் புயல், அஜித் வெளியே போர்ஸாக இருப்பார் உள்ளே அமைதி, விஜய் வெளியே அமைதியாக இருப்பார், உள்ளே போர்ஸாக இருப்பார் என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement