பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப காலத்தில் காயத்திரி, சக்தி, ஓவியா போன்றோர் இருந்தபோது நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தது. ஒரு முறை ஓவியா மீது கோவப்பட்டு அவரை அடிக்கும் அளவிற்கு கையை ஓங்கினார் சக்தி.

இந்த நிகழ்வு அந்த சமயத்தில் மிகவும் பிரபரபாக பேசப்பட்டது. அதோடு சமூக வலயத்தளங்களில் இது குறித்து மீம்களும் பறந்தன.

Advertisement

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தன்னுடைய அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த சக்தி, ஓவியாவை அடிக்க கையை ஓங்கியது தவறு என்பதை தான் உணர்ந்ததாகவும், அது அவருடைய மனதில் உறுத்தலாக இருந்ததாகவும் அதனாலேயே அவர் ஓவியவிடம் பிக் போஸின் 100 வது நாளில் மன்னிப்பு கேட்டதாகவும் கூறுயுள்ளார்.

அதோடு பிரச்சனை நடந்த சமயங்களில் ஓவியவிடம் மன்னிப்பு கேட்காததற்கு காரணம், அவருடைய மனநிலை திடீர் திடீர் என மாறிக்கொண்டே இருந்ததாகவும், தனக்கு பைபோலார் இருப்பது குறித்து ஓவியாவே தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

எது எப்படியோ, தான் செய்த தவறிற்கு வருந்தி, சக்தி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்டது ஒரு நல்ல பண்பாகவே கருத வேண்டும்.

Advertisement
Advertisement