தமிழகத்தில் மிகவும் பழமையான திரையரங்குகளில் ஒன்றான மாடர்ன் திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கே கலைஞரின் நினைவு சிலை வர உள்ளதாக சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது மாடர்ன் திரையரங்கம் வரலாறு குறித்து பலரும் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் அவர்களையும், மரடர்ன் தியேட்டரையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஒரு காலத்தில் சென்னையை விட அதிக திரையரங்கில் சேலத்தில் என்று கூறப்படுகிறது. மேலும் ஆரம்ப காலத்தில் படங்கள் தயாரிப்பு சேலம் மாவட்டத்தை மையப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என் பன்முகத்திறமை கொண்ட டி ஆர் சுந்தரம் என்பவர் கடந்த 1907 ஆம் ஆண்டு சேலத்தில் திருச்செங்கோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகனாக பிறந்தவர் தான் டி ஆர் சுந்தரம். இவர் தன்னுடைய படிப்பை லண்டனில் முடித்து தமிழ் நாடு திரும்பும் நேரத்தில் தமிழில் முதல் முறையாக பேசும் படமான காளிதாஸ் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றது.

Advertisement

இந்நிலையில் குடும்ப தொழிலின் மீது கவனத்தை செலுத்தாலும் சினிமாவின் மீது இவருக்கு ஆர்வம் போக வேலாயுதம் என்ற நண்பருடன் இணைந்து டி ஆர் சுந்தரம் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 1934ல் தொடங்கினார்.பின்னர் இவரின் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரெளபதி வஸ்திராபரணம், நல்ல தங்காள் போன்ற படங்களை தயாரித்த இவர் தனியாக மாடர்ன் தியேட்டர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி ஒரு தனியார் நிறுவனம் போல சினிமாவை தயாரிக்க ஆரம்பித்தார்.

சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உருவாக்க 10 ஏக்கரில் இடத்தை வாங்கி அங்கேயே படத்தை தயாரிக்கும் வசதியுடன் கூடிய மார்டன் தியேட்டரை உருவாக்கினார். மேலும் இதனை குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் சிறந்த படைப்புகளை தரும் நோக்கிலும் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரையரங்கில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார்.

Advertisement

மேலும் மலையாளத்தில் பேசும் படமான “பாலன்” எம்ஜிஆர் நாயகனாக நடிக்க, கருணாநிதி வசனம் எழுதினார். தமிழில் இரட்டை வேடப் படம் உத்தமபுத்திரன், தமிழ் முதல் வண்ணத் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும், மலையாளத்தில் முதல் வண்ணப் படம் என முக்கிய படங்களை மாடர்ன் ஸ்டேட்டஸ் தயாரித்து குறிப்பிடதக்கது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த திரையரங்கம் இடித்து வீடுகளாக கட்டப்பட்டது.

இந்நிலையில் மாடர்ன் திரையரங்கின் முகப்பு அலங்கார வளைவை கட்டுமான பணியாட்கள் இடிக்க முயற்சி செய்த செய்தி சன் டிவியில் வெளியான நிலையில் அன்றய முதல்வர் கருணாநிதி கண்டுமான நிறுவனத்திடம் பேசி அந்த அலங்கார வளைவை மட்டும் இடிக்க வேண்டாம் என்று கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக முதல்வர் முக ஸ்டாலின் கள ஆய்வை மேற்கொண்டு வந்த போது கருணாநிதி காப்பாற்றிய மாடரன் திரையரங்கின் அலங்கார வளைவின் முன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்

Advertisement