தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என சமந்தா பணியாற்றி வந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சமந்தா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

Advertisement

சமந்தா நடிக்கும் படங்கள்:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம், யசோதா ஆகிய பல படத்தில் சமந்தா பிசியாக நடித்து வருகிறார்.

விழாவில் சமந்தா அணிந்திருந்த ஆடை:

இப்படி சமந்தா அவர்கள் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் இருந்தாலும் இருப்பார். இதில் இவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படம்,வீடியோ என்று பதிவிட்டு வருவார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் சமந்தா அணிந்திருந்த ஆடை குறித்த சர்ச்சைக்கு சமந்தா அளித்திருக்கும் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து இருந்தார்.

Advertisement

நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நடிகை சமந்தா பதிலடி:

அப்போது அவர் பச்சை நிறத்தில் கிளாமர் காஸ்ட்யூமில் வந்திருந்தார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் சிலர் பாசிட்டிவ் பதிவுகளையும், சிலர் நெகடிவ் பதிவுகளையும் போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தன்னுடைய ஆடை குறித்து வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு பெண்ணை அவர் அணிந்திருக்கும் உடையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் எளிதான ஒரு விஷயமாக உள்ளது. ஒரு பெண்ணின் உடை, இனம், கல்வி, சமூக நிலை, தோற்றம் ஆகியவற்றை வைத்து மிக எளிதாக பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

நாகரீகத்தை பற்றி சமந்தா சொன்னது:

நாம் 2022ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஒரு பெண்ணை அவருடைய உடையை மட்டும் அளவிட்டு மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமே. மக்கள் ஒருவரை புரிந்து கொள்ளும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும் போது சுய விமர்சனமும் மிகவும் முக்கியம். நமது கொள்கைகளை வேறொருவர் மீது சுமத்துவது எந்தவித நன்மையும் கிடையாது. ஒரு நபரை விமர்சனம் செய்யும்போது எழுதும் வார்த்தைகளில் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமந்தா பதில் கொடுத்திருந்தார். இப்படி சமந்தாவின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement