சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது சமந்தா மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். மேலும், சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகும் சமந்தா அவர்கள் படம், வெப்சீரிஸ் என்று பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதனிடையே சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. இது வதந்தியாக முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று இவர்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று அதிகார பூர்வமாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

Advertisement

இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்து பல சர்ச்சைக்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து இவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதற்கு சமந்தாவை குற்றம்சாட்டி பல செய்திகள் இணையத்தில் வலம் வந்தது.

இந்நிலையில் இது குறித்து சமந்தா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் என்னை பாதிக்காது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதோடு தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்பிய சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெங்கட்ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தா உடைய திருமண வாழ்க்கை குறித்தும் சமந்தாவுக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி தவறாக பேசியாதல் சமந்தா அவர் மீது வழக்கு தொடர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement