மருத்துவ சிகிச்சைக்காக பிரபல நடிகரிடம் சமந்தா கோடி கணக்கில் கடன் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோயால் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

சமந்தா நடித்த படம்:

இதனை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

சமந்தாவின் நோய் தாக்கம்:

இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் படு தோல்வி அடைந்தது சமந்தாவிற்கு மன வருத்தத்தை அளித்திருந்தது . இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நடிப்பில் உருவாகி வரும் குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. அதாவது, கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

Advertisement

சினிமாவில் இருந்து விலகிய சமந்தா:

இதற்காக இவர் தீவிரமாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் சமந்தா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

நடிகரிடம் கடன் வாங்கிய சமந்தா:

அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் இந்தோனேசியாவில் உள்ள பாலி என்ற தீவில் தன்னுடைய தோழி உடன் விடுமுறையை கழித்து வருகிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் இவர் தன்னுடைய மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் தெலுங்கு ஹீரோவிடம் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சமந்தா 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறாராம். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. ஆனால், அந்த நடிகர் யார் என்ற தகவல் மட்டும் தெரியவில்லை. அதோடு இவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement