பெயரை பச்சை குத்திய ரசிகர் - மியா கலீபாவின் குணம் ஏன் சமந்தாவிற்கு இல்லை. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Rajkumar · 19/9/2021

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் உடலில் டாட்டூ குத்திக்கும் கலாச்சாரம் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. சினிமா பிரபலங்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்டார்கள் என தங்களுக்கு விருப்பமானவர்களின் படங்களை டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தாவின் பெயரை கையில் டாட்டூ குத்திக்கொண்டு இளைஞ்சரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை சமந்தாவிற்கு தற்போது தமிழை விட தெலுங்கில் தான் ரசிகர்கள் அதிகம் இருந்து வருகின்றனர். அதே போல சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேமிலி மென் வெப் சீரிஸால் பல தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தார் சமந்தா. இப்படி ஒரு நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் சமந்தாவின் பெயரை கையால் டாட்டூ குத்திக்கொண்டு உள்ளார்.

இதையும் பாருங்க : சோனு சூட் இத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் (ஓடி ஓடி உதவி செஞ்ச மனுஷனுக்கா இந்த நிலை)

அதில் 'என்னுடைய முதல் காதலும் கடைசி காதலும் சம்மு தான். உன் மீது நான் கொண்ட காதலுக்கு அளவே இல்லை. அது என்றும் நிரந்தரமானது, அதேபோல இந்த தேடவும் நிரந்தரமாக இருக்கும்' என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த சமந்தா, அந்த ரசிகருக்கு இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறாமல், மிகவும் சிம்பிளாக எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் அப்செட் அடைந்து தயவு செய்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று சமந்தாவை வறுத்தெடுத்து வருகின்றனர். பொதுவாக ரசிகர்கள் இது போல முட்டாள் தனமாக செய்தால் அவர்களுக்கு நடிகர் நடிகைகள் அறிவுரை தான் வழங்குவார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் பிரபல ஆபாச நடிகையான மியா கலீபா முகத்தை காலில் ஒரு நபர் டாட்டூ குத்தி இருந்தார்.

அதற்கு மியா கலீபா அதிருப்தி அடைந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் பயங்கரமானது எனக் கூறி இருந்தார். அதே போல கடந்த 2010 ஆம் ஆண்டு கூட இளைஞர் ஒருவர் டாட்டூ குத்திக்கொண்டார். அப்போது மியா, நான் இதையெல்லாம் விரும்பவில்லை. எனது முகத்தை, பெயரையும் டாட்டூவாக போடுவதை நிறுத்துங்கள் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full