சமீபத்தில் தனது போலியான ஆபாச புகைப்படம் ஒன்று வைரலான நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான இன்ஸ்டாவின் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

குறிப்பாக கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா-சமந்தா நடித்த படம் குஷி. காதல் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதனிடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது.

மயோசிடிஸ் நோய்:

இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. மேலும், கடந்த ஆண்டு அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் சமந்தா. பின் சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் மன நிம்மதிக்காக சமந்தா சுற்றுப்பயணம் சென்று இருந்தார்.

Advertisement

கம்பேக் கொடுக்கும் சமந்தா:

மேலும், சமந்தா அவர்கள் தற்போது பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். மீண்டும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் பாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வமாக காட்டியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்ட ஒரு சில வினாடியிலேயே டெலிட் செய்துவிட்டார் என்று புதிய சர்ச்சை கிளம்பியது.

Advertisement

சமந்தா கவர்ச்சி புகைப்படம்:

இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கையில் இதை தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடைய ரசிகர்கள் தான் செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா. அந்த பதிவில் உண்மையான நெகிழ்வு உங்களை நியாயப்படுத்தவோ அல்லது நிரூபிக்கவோ தேவையில்லாமல் வெளியேற உங்களை அனுமதிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement