தன்னுடைய முன்னாள் மச்சினர் குறித்து சமந்தா போட்டுள்ள பதிவு படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக இருவரும் கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

சமந்தா – நாக சைதன்யா :

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

தன் மச்சினனுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா :

இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். விவாகரத்து பின்னர் சமந்தா தன்னுடைய திருமண புடவையை கூட திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாகார்ஜூனா குடும்பத்தின் ஒட்டு உறவை கூட முறித்துவிட்டதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நாகசைதன்யாவின் சகோதரர் நிகில் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் சமந்தா.

Advertisement

முதல் மனைவி லட்சுமி :

அதில், இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் தேடும் எல்லாவற்றிலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று கட்டிப்பிடி எமோஜியை போட்டு இருகிறார் சமந்தா. நாகர்ஜுனா கடந்த 1984 ஆம் ஆண்டு ராமாநாயுடுவின் மகளும் நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லக்ஷ்மி என்பவரை தான் முதல் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இரண்டாம் மனைவி அமலா :

இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைத்னயா. அதன் பின்னர் கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். லட்சுமியை பிரிந்த பின்னர் தான் நாகார்ஜூனா நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த மகன் தான் அகில் என்பது குறிப்பிடதக்கது. நாக சைதன்யாவை போல அகிலும் ஒரு நடிகர் தான். இவர் நடித்த ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement