இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.

கடந்த ஏப்ரல் மாதம்  சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக கடவுளுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் 31 வயதான சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த செய்தியை அவரின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

Advertisement

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டினர். குழந்தை பேரு காரணத்தினால் சானியா மிர்சா உடல் எடை கூடி படு குண்டாக மாறி இருந்தார்.

தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ள சானியா மிர்சா கிட்டத்தட்ட 26 கிலோ குறைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர் பாகிஸ்தான் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின் தற்போது மீண்டும் விளையாட்டில் உள்ள ஆர்வத்தினால் களத்தில் இறங்க உள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement