விருது விழாவில் சஞ்சீவ் - மானசா செய்த செயல்..!புதுசா காதலிச்சாலும் அதுக்குன்னு இப்படியா..!

By Rajkumar · 18/12/2018

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மனசா  மற்றும்சஞ்சீவ் இருவருக்கும் சிறந்த மற்றும் அதிகளவில் பேசப்படும் ஜோடிகள் என்ற விருதை பெற்றுள்ளனர்.

https://www.instagram.com/p/Brek-iSnDvt/

மானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : மானஸாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் திருமணம்

அதே போல மனசாவும் தன்னுடன் சீரியலில் நடித்து வந்த சஞ்சீவை தற்போது காதலித்து வருகிறார்.
இந்நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது விழாவில் ஆல்யா மானசா-சஞ்சீவ் கார்த்திக் இருவருக்கும் சின்னதிரையின் பிரபல மற்றும் சிறந்த ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது.

இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இருவரும் ஏதோ ஆஸ்கார் விருதை வாங்கியது போல கட்டி தழுவி அனைவர் முன்பும் முத்த மழையை பொழிந்து கொண்டனர். என்னதான் காதலாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொளவது என்று அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full