சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வசூலில் சூரியின் மாமன் முந்தியதா? முதலிடம் யாருக்கு?

By subhashini · 17/5/2025

மாமன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மாமன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நேற்று மாமன் படம் வெளியான அன்று தான் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகியிருக்கிறது.

டிடி நெக்ஸ்ட் லெவல்:

தில்லுக்கு துட்டு படம் வரிசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஹாரர் கதையை மையமாகக் கொண்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

சூரி-சந்தானம் பட வசூல்:

மேலும், முதல் நாளிலேயே சூரி நடித்த மாமன் படம் 1.53 ரூபாய் வசூல் செய்தது. அதேபோல் சந்தானம் நடித்த ஆர்யா தயாரித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முதல் நாளில் 2.54 கோடி வசூல் செய்து இருக்கிறது.
இனி வரும் நாட்களில் சந்தானத்தை விட சூரியின் படம் அதிகமாக வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

மாமன் கதைக்களம்:

படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது. தனக்கு மருமகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த அன்பையுமே
சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார்.

காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சூரியை விட்டு அவருடைய மருமகன் பிரியாமல் கூடவே இருக்கிறார். ஆரம்பத்தில் இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருமே பிரிய முடிவே எடுக்கிறார்கள். இதனால் உறவுகள் இடையே விரிசல் ஏற்படுகிறது. மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full