கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜானசன் கே இயக்கத்தில் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இணைந்தனர். இதில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்தனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன்நடித்து இருந்தார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன், எடிட்டராக பிரகாஷ் பாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷ் ஆகியோர் பணிபுரிந்துனர். இந்த படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்த அனைகா சோடி ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் வெளியான ‘காவியத் தலைவன்’ படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

காவியத்தலைவன் படத்திற்காக இவருக்கு சிறந்த துணை நடிகையாக விருதும் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அதர்வா முரளி நடித்த செம போதை ஆகுதே, ஜீவா நடித்த ‘கீ’ போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தெலுகு படங்களிலும் நடித்து உள்ளார். பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர்.

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இறுதியாக ரியோ நடிப்பில் உருவான பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் அந்தவகையில் இவர் பிகினி உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement