நடிகை கனகாவின் தனிமைக்கு காரணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகை கனகா அவர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார். நடிகரும்

இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதோடு சில வருடங்களாகவே கனகாவை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தார்.

Advertisement

கனகா குறித்த சர்ச்சை:

இதனால் பலரும்கனகா இறந்து விட்டார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி விட்டார்கள். பின் கடந்த ஆண்டு நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனகா சந்தித்த ஏமாற்றங்கள் :

சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்து இருக்கிறார் கனகா.இதனிடையே இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கனகா தனிமை வாழ்கையினை கடத்தி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கனகா வீட்டில் தீ பிடித்து இருந்தால் தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்து இருந்தார்கள்.

Advertisement

சரத்குமார் பேட்டி :

பின் கனகா மற்றும் அவரின் வீட்டின் நிலைமை குறித்தும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதை பார்த்த பலருமே கனகாவிற்கு என்ன ஆனது? பல வருடங்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையாக இருக்க காரணம் என்ன? ஏன் இப்படி இருக்கிறார்? என்று பல கேள்விகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் கனகாவின் இந்த நிலை குறித்து சரத்குமார் பேசி இருக்கிறார்.

Advertisement

கனகாவின் இந்த நிலைக்கு காரணம் :

இதுகுறித்து பேசிய அவர் ‘ நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி சினிமா மீது அவர் அதிக காதலை கொண்டிருந்தார் ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் அவர் மனதில் ஒரு அழியாத காயத்தை ஏற்படுத்தி விட்டது. அதுவே காலப்போக்கில் மிகப்பெரிய மன அழுத்தமாக மாறியதால் அவர் சினிமாவில் விட்டு விலக காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் பலருக்கும் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கெல்லாம் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்

Advertisement