முதன் முதலாக மனம் திறந்து தன்னுடைய முதல் மனைவி குறித்து நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

மேலும், ஆரம்பத்தில் இவர் படங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவர் குணசித்திர வேடங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார். இதனிடையே இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி மட்டுமில்லாமல் பூஜா என்ற இன்னொரு மகளும் சரத்குமாருக்கு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

Advertisement

சரத்குமார் திருமண வாழ்க்கை:

பின் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேருமே பரஸ்பரமாக 2000 ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள். அதற்குப் பிறகு சாயாதேவி தன்னுடைய மகள் வரலட்சுமி உடன் தான் தனியாக வசித்து வசித்து வருகிறார். பின்னர் சரத்குமார் அவர்கள் நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

சரத்குமார் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சரத்குமார் அவர்கள் தன்னுடைய முதல் மனைவி குறித்து கூறியிருந்தது, உண்மையில் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார். வரலட்சுமி அம்மாவை நான் விவாகரத்து செய்த போதும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். வரலட்சுமியிடம், நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் அவர் சொல்லவில்லை.

Advertisement

முதல் மனைவி குறித்து சொன்னது:

சில காரணங்களால் எங்களுக்குள்ளான பாதைகளை நாங்கள் தனித்தனியாக தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மற்றபடி கால் புணர்ச்சி வைத்துக் கொள்ளவில்லை. தற்போது நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம். எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

சரத்குமார் குறித்த தகவல்:

நடிகர் சரத்குமார் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement