விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒரே மாதிரி கதையில் வேறு வேறு நடிகர்களை வைத்து இன்னும் கேசட் தேயும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சரவணன் மீனாட்சி. சீசன் சீசனாக ஓடிக்கொண்டிக்கிறது.
தற்போது இந்த தலைமுறை சரவணன் மீனாட்சியை சரவணனாக நடித்து வருபவர் பிரபல வீ.ஜே ரியோ தான். ஆனால், இதில் கடந்த இரண்டு தலைமுறையாக மீனாட்ச்சியாக ரக்சிதா மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த சீரியல் ஆரம்பிக்கும் முன்னரே, ரக்சிதாவிற்கு பதிலாக வேறு ஒரு ஆளை நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், கடைசியில் அவரே நடித்து வருகிறார்.

Advertisement

ஆனால், இந்த சரவணன் மீனாட்சியில் ரியோவை சரவணனாக நடிக்க பேசிய போது, புதிய கதை, புதிய ஹீரோயின் எனக் கூறி தான் பேசியுள்ளானர். ஆனால், இறுதியில் சரவணன் மீனாட்சியாக மீண்டும் அதே சீரியல் அதே ஹீரோயின் நடிக்க கடுப்பாகி விட்டர் ரியோ.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரியோ என்ன செய்வது என தெரியாமல் அதில் நடித்து வருகிறாராம். தற்போது நடித்து வரும் மீனாட்சிக்கு நடிக்க பிரச்சனை இருக்கிறது, ஏன் இன்னும் இவரை வைத்துள்ளீர்கள் என இயக்குனரிடம் ரியோ கேட்டும் அவரை மற்றவில்லையாம். இதனால் வேறு வழி இல்லாமல் நடித்து வருகிறாராம் ரியோ.

Advertisement