இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திட்டமிட்டபடி வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
சர்கார் ரிலீஸுக்காக தயாராகும் திண்டிவனம் ‘ரோகினி’ திரையரங்கம்:
சர்கார் படத்தின் கதை திருட்டு விவாகரத்தில் துணை இயக்குனர் வருண் என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்கார் படகுழுவினரிடம் சமரசம் ஏற்பட்டு வழக்கு இன்று தள்ளுபடி செய்யட்டப்பட்டது.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் சர்கார் படத்திற்காக திரையரங்குகளையும், புக்கிங் வேலைகளையும் மும்மரபடுத்தியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ரோகினி திரையரங்கின் உரிமையாளர் ரேவேந்த் , சர்கார் படத்தின் புக்கிங் விவரத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் ரேவந்த் பதிவிட்டுள்ள அந்த பதிவில், சர்கார் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,புக்கிங் அறிவிப்பு மிக விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் எப்போது புக்கிங் துவங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.