"சிம்டாக்காரன்" பாடல் பாடியவர் இவரா..! பாத்தா ஷாக் ஆவீங்க..! புகைப்படம் இதோ.!

By Ajju · 25/9/2018
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள "சர்கார் " படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து "சிம்ட்டாங்கரன்" என்ற ஒரு பாடலை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது சன் குழுமும். சர்கார் படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். அதே போல நேற்று வெளியான சிம்டாங்காரன் பாடலை பாடியது பம்பா பாக்யா என்பவர் தான், பின்னனி பாடகரான இவர் 18 ஆண்டுகளாக மேடை பாடகராக இருந்து வருகிறார். இவர் ரகுமான் இசையில் "ராவணன்" படத்தில் இடம் பெற்ற கேடாகரி என்ற பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பம்பா பாக்யா, சர்கார் படத்தில் பாட எபப்டி தன்னை ஏ ஆர் ரகுமான் தேர்ந்தெடுத்தார் என்ற சவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், 15 ஆண்டுகளுக்ககு முன்னர் என்னுடைய குருநாதர் பொன்னேரி வாபாவை சந்தித்த போது தான் ரகுமானை சந்தித்தேன். பொன்னேரி வாபா, ஏ ஆர் ரகுமானிற்கும் குருநாதர் தான். நான் ராகுமானை சந்தித்தபோது நான் ஒரு பாடகர் என்பது ஏ ஆர் ராகுமனுக்கு தெரியாது, நானும் சொல்லவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் அவருடன் பழகி வந்தேன். பின்னர் ராவணன் படத்தில் கடா கரி பாடலை பாட எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அது தான் என்னுடைய முதல் பாடல். அதன் பின்னர் நிறைய ஹார்மோனி நிகழ்ச்சியில் படிவந்தேன் இடையில் கொஞ்சம் கேப் ஆகிவிட்டது. அதன் பிறகு ரஜினி சாரின் 2.0 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தான் தற்போது "சர்க்கார்" படத்தில் வாய்ப்பு கொடுத்தார் என்று கூறியுள்ளார் பாடகர் பம்பா பாக்யா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full