படுக்கைக்கு அழைத்தாள் தப்பு இல்ல..! அதனால் வேலை கிடைக்குது ! பிரபலம் சர்ச்சை பேச்சு

By Ajju · 25/4/2018
சமீப காலமாக சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று பல நடிகைகள் கூறுகின்றனர். மேலும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சற்று ஒரு படி மேலே சென்று தெலுங்கு சினிமாவில் உள்ள பல்வேறு அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவரின் கருத்திற்கு பல நடிகைகளும் ஆதரவு தெரிவித்து தங்களுக்கும் இது போன்ற செக்ஸ் தொல்லைகள் இருந்ததாக தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் ஹிந்தி சினிமா துறையின் பிரபல பெண் நடன இயகனுனர் சரோஜ் காண் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது ஒன்றும் பெரிய விஷம் அல்ல என்று கூறி சர்ச்சையை களிப்பியுள்ளார். இவரின் கருத்திற்கு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் மீது உள்ள மரியாதை போய்விட்டது என்று சரோஜ் கான் மீது கடுப்பாகியுள்ளார். பிரபல ஹிந்தி நடன இயக்குனரான சரோஜ் கான் இதுவரை இந்தியில் 2000 கும் மேற்பட்ட பாடல்களுக்கு கோரியோகிராப் செய்துள்ளார் . சமீபத்தில் ரெட்டி குறித்து கருத்து தெரிவித்த இவர் இது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை . பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையளிலும் தான் இருக்கிறது . மேலும் ஒரு சில அரசு துறைகளில் கூட இது போன்ற சபவங்கள் நடக்கிறது ஆனால் சினிமா துறையில் மட்டும் இந்த விஷயத்தை பெரிதாக்குவது என் ? சினிமாவில் பெண்களை படுக்கைக்கு அழைத்தாலும் அவர்களுக்கு வேலையாவது கிடைக்கின்றது . ஆனால் ஒரு சில துறைகளில் பெண்களை பயன்படுத்தி மட்டும் விடுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் இவரது கருத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்ட போது நான் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன் ஆனால் காஸ்டிங் என்ற விஷயத்தை நான் இதுவரை அறிந்தது இல்லை . அப்படி இருந்தால் அது குறித்து நான் பெருவேன் என்று கூறியுள்ளார். மேலும் சரோஜ் கானின் இந்த சர்ச்சியான கருத்திற்கு பல நடிகைகளும் ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற ஒரு நடன இயக்குனர் இது போன்ற விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெருவிகளாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full