மலையாள நடிகை மஞ்சு வாரியர் காணவில்லை, அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பிரபல மலையாள இயக்குநர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

திலீப்- மஞ்சு வாரியார்:

மேலும், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நடிகர் திலீப் அவர்கள் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நடிகர் திலீப் அவர்கள் நடிகை பாவனாவை கூலிப் படையை விட்டு ஏவிய புகாரில் கைது ஆனார்.

திலீப் வழக்கில் மஞ்சு வாரியார்:

இதற்காக இவர் 85 நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது தான் நடிகர் திலீப் ஜாமீனில் இருந்து வெளியே வந்து இருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்று பிரபல இயக்குனர் பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பது, நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

Advertisement

பிரபல இயக்குனர் சணல் குமார் பதிவிட்ட பதிவு:

அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது. ஆனால், இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. நடிகை மஞ்சு வாரியரின் மௌனம் இன்னும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in Cinema Collective என்கிற அமைப்பிற்கும் நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர்.

Advertisement

மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து:

கேரள ஊடகங்கள் இவ்விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிப்பது பயமாக இருக்கிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சனையாக இது இருப்பதனால் ஊடகங்களும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு மேல் என்னால் எதையும் செய்ய முடியாது என்ற வேதனை அளிக்கிறது. குறைந்தபட்சம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

Advertisement