‘வெற்றிமாறன் ஒரு மிருகம்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டு காலமாக செயல்பட்டு ஒருங்கிணைப்பாளராக மக்களின் நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சீமான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் முந்திரிக்காடு. தமிழ் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மு களஞ்சியம் இயக்கியிருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து சமீபத்தில்ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் ஆர்ப்பாட்டம் செய்து நடத்தி இருந்தார்.

Advertisement

சீமான் அளித்த பேட்டி:

அதில் அவர் வெற்றிமாறன் குறித்து சொன்னது, மிகச்சிறந்த படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா என பல பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குனர்கள் சிறந்த படங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தை பார்த்தேன். இந்த படத்தை எடுப்பதற்கு அவர் கடும் உழைப்பை போட்டிருக்கிறார். காட்டுக்குள் பயணித்து மலையில் ஏறி கடுமையான உழைப்பை வெற்றிமாறன் தந்திருக்கிறார்.

வெற்றிமாறன் குறித்து சொன்னது:

அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம். அந்த வெறியில் அவர் படம் எடுத்து இருக்கிறார். இது பாராட்டுக்குரிய ஒன்று என்று கூறியிருந்தார். கோலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

Advertisement

விடுதலை படம்:

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

Advertisement

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை குறித்து திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement