மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்வாங்க என்னை சிறைக்கு அனுப்புவார்கள். அதற்க்கு பின் நான் சும்மா இருப்பேனா? சீமான் ஆவேசம்.

By Dhilip Kumar · 15/9/2023

யார் இந்த வீர லட்சுமி என்னுடைய கால் கட்ட விரலில் உள்ள முடி சமம் ஆவர்? சில நாட்களாகவே சீமான் விஜயலட்சுமி பிரச்சனை தான் பெரும் பேசும் பொருளாக இருக்கிறது. நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி துணையாக இருக்கிறார். இவர் விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருக்கிறார். வீரலட்சுமி சீமான் மீதும் சாட்டை துறைமுருகன் மீதும் புகார் அளிக்க சென்று இருந்த நிலையில் அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வீர லட்சுமியை ஆபாசமாக பேசியும் அவரை மிரட்டி வந்தனர். வீர லட்சுமியும் சீமானை விமர்சித்து தான் வருகிறார்.

சீமான் கூறியது:

விஜயலட்சுமி புகார் கூறினார் சரி என்றால் அவரை என் படத்தில் நடித்துள்ளார். யார் இந்த வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு என்ன சம்பந்தம். கமிஷனர் அலுவலகத்தில் என்னுடைய சார்பில் என்னுடைய தம்பிகள் புகார் அளிக்க சென்று இருந்தார் அப்போது வீரலட்சுமி அங்கு வந்திருந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவதாக அவர் கூறியிருந்தார். இந்த வீரலட்சுமி தொடர்ந்து தவறான கருத்துக்களை கூறி வருகிறார் இது குறித்து சான்று உள்ளதா செய்தியாளர்களும் அவரிடம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை காவல்துறையினரும் அவரிடம் கேள்வி எழுப்பவில்லை.

அந்த வீரலட்சுமி கூறுகிறார் நான் எழுத ஜூனியர் ஆக்டருக்கு ஒரு கோடி கொடுத்த செட்டில்மென்ட் செய்தவன் என்று. உண்மையில் ஜூனியர் ஆர்டிஸ்ட் யார் தெரியுமா அது இந்த வீரலட்சுமி தான். அவருக்கு எதற்கு இந்த இவ்வளவு கோபம் செட்டில்மெண்ட் செய்த அன்று இவருக்கு குறைவாக செட்டில்மெண்ட் செய்ததால் இவர் அவ்வாறு பேசி வருகிறார். நான் யார் என்று அவர் தெரியாமல் வீரலஷ்மி பேசியிருக்கிறார். Youtube சேனல்கள் பேட்டி கொடுப்பது அவன் இவன் என்று கூறி வருகிறார். நான் ஜனநாயகவாதியாக இருப்பது தான் உங்களுக்கு பிரச்சனையா எனக்கு மற்றொரு முகமும் இருக்கிறது.

முதலில் நான் யாரு தெரியுமா கேடு கெட்ட ரவுடி பையன். நான் சிறைக்குள் செல்லாமல் இருக்க வேண்டும் நினைக்கின்றேன் அதனால் தான் நீங்கள் இவ்வாறு பேசி வருகிறீர்கள். என்னுடைய கால் விரலில் இருக்கும் முடி அளவிற்கு சமமா நீ. வீரலட்சுமி எனக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறாரா அவரால் அந்த ஸ்கெட்ச் கூட தூக்க முடியாது என்று ஒருமையில் வீரலட்சுமி விமர்சித்து வந்த. இவ்வளவு நாள் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைகள் எதிலும் அவர் பங்கு ஏற்றுக் கொள்ளவில்லை நாங்கள் தான் அனைத்திற்கும் சென்று போராட்டம் நடத்தி வந்தோம் அப்போது எங்க போனாரு இந்த வீரலட்சுமி இப்போது மட்டும் என்னிடம் பணம் பறிக்கும் முயற்சி செய்து வருகிறார்.

நான் யார் என்று முதலில் தெரியுமா ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்து நான் என் தலைவனை சென்று சந்தித்து வந்துள்ளேன். மிஞ்சி மிஞ்சி போனா என்ன செய்வாய் என்னை சிறையில் அடைப்பாய் அதன் பின் நான் வெளிவந்து தான் ஆக வேண்டும். அதன் பின் நான் உங்களை சும்மா விடுவேனா?. எனக்கு பிறப்பில் வீரம் இருக்கிறது என்னுடைய ரத்தத்தில் வீரம் இருக்கிறது. என்னிடம் வீரமெல்லாம் இருக்கிறது.

https://youtu.be/DHxOYwasqGM?si=9GHB9jhO1E70gGKJ

இந்த இரண்டு லட்சுமியும் திரும்பி பெற்றுக் கொள் என்னிடம் இல்லாதது பணம் மட்டும் தான் அதனால் தனலட்சுமியும் தானிய லட்சுமி அனுப்பிவிடு என்றும் சீமான் கூறினார். நான் அங்கு கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகும் போது என்னுடைய மனைவியும் கூட வருவார் ஏனென்றால் அவர் சட்டம் படித்தவர் என்னுடைய வக்கீலாக அவர் வருவார். இதில் தேன்மொழிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் அவர் எழுதிய வசனத்தில் நான் ஒரு திரைப்படத்தில் நடித்தேன் அதற்கு முன் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சீமான் வீரலட்சுமி விமர்சித்து பேசினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full