தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார்.  இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

Advertisement

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான செல்வராகவன் சில வருடங்கள் திரைப்படங்களை கூட இயக்காமல் இருந்து வந்தார். அதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு பின்னர் மிகவும் பருமனாக இருந்த கீதாஞ்சலி தற்போது உடல் எடை குறைத்து படு மாடர்னாக மாறியுள்ளார்.

Advertisement
Advertisement