தமிழ் சினிமாவில் வித்யாசமான் கதைக்களத்துடன் தரமான படங்களை கொடுப்பவர் செல்வராகவன். அவரைப் போலவே அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும் மாலை நேரத்து மயக்கம் என்னும் ஒரு தரமான படைத்தை இயக்கினார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குண்டாக காணப்பட்ட கீதாஞ்சலி சமீபத்தில் கணவர் செல்வராகவனுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக காணப்பட்டார்.

இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த பலர் எவ்வாறு இப்படி உடம்பினை குறைத்தீர்கள் எனக் கேட்டனர். அதற்கு தற்போது அவர் பதில் கூறியுள்ளார்,
/>நான் உடம்பினை குறைத்ததற்க்கு காரணம் பல நாட்களாக எனது இடுப்பில் வலி இருந்தது. இதற்க்காக டாக்டர் எனது உடம்பினை குறைக்க வேண்டும் எனக் கூறினர். அதனால் தான் உடம்பினை குறைத்தேன்.
தினமும் கார்டியோ இரண்டு மணி நேரம் செய்வேன், சில கிலோ மீட்டர் தினமும் நடப்பேன், பின்னர் இருபது நிமிபம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற உடற்பயிற்சிகள் செய்து அதனுடன் அரை மணி நேரம் நீச்சல் அடிப்பேன். பின்னர் டயட் இருப்பேன் எனக் கூறினார் கீதாஞ்சலி .

Advertisement
Advertisement