ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும், ஆதியை ஒருதலை பட்சமாக காதலிக்கும் உமா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் ஜெனிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் ‘மதங்களைக் கடந்த காதல் திருமணம் என்பதும் குறிப்பிடதக்கது. அதிலும் ஜெனிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கார் ஓட்டுநர் என்பது தான் மிகவும் ஆச்சரியம்.

Advertisement

ஜெனிஃபர் சரவணனை மூன்று வருடங்களுக்கு முன்னால் குடும்பத்தோடு ஒரு காரில் சென்றபோது தான் சந்தித்துள்ளா.ர் அந்த காரை சரவணன் தான் ஓட்டியுள்ளார். இன்ஜினியரிங் படித்துவிட்டு வேறு வழியில்லாமல் ஓட்டுனராக பணியாற்றியுள்ளார் சரவணன். இந்த கதையை அவர் குடும்பத்தார் அனைவர் முன்பும் கூறியுள்ளார். இதனால் சரவணன் மீதுஜெனிபருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர் சரவணன் ஜெனிபர் வீட்டுக்கு நேரடியாக வந்து பின் கேட்டுள்ளாராம்.

சரவணன் கூறிய கதை ஜெனிபர் குடும்பத்திற்கு ஏற்கனவே பிடித்துப் போய்விட சரவணனை மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ள.து ஜெனிபர் சீரியல் முடிந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியும் சரவணன் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதால் திடீரென்று திருமணத்தை முடித்து விட்டாராம் ஜெனிபர்.

Advertisement
Advertisement