பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை..! அவரே சொன்ன காரணம்
இயக்குனர் பாண்டியராஜன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள பி "செம " படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகி மேடையில் அழுது அனைவரயும் அதிர்ச்சியடைய வைத்தார்.
நடிகர் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் புதுமுக நடிகை அர்த்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, மைசூர் அலிகான், கோவைசரளா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜன் தயாரித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய இந்த படத்தின் நாயகி அர்த்தனா மேடையில் திடீரெண்டு அழுத்துவிட்டார். நீண்ட நேரம் தனது கண்களில் கண்ணீரை வைத்துக் கொண்டு பேசுவதற்கே சிரமப்பட்டார்.
பின்னர் எப்படியோ சமாளித்து அழுகையை கட்டுப்படுத்தி பேசிய அவர், நான் இந்த படத்தில் மிகவும் கடின உழைப்பை போட்டு நடித்துள்ளேன். நான் மட்டும் அல்ல இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே கஷ்டப்பட்டுதான் நடித்துள்ளனர்,
இந்த படம் வெளியாக ஒரு நல்ல வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதை எண்ணி தான் எனக்கு அழுகை வந்து விட்டது என்று பின்னர் தெரிவித்தார். இதற்கு பின்னர் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர், .இயக்குனர் பாண்டியராஜன் அர்த்தனா அழுததற்கு காரணம் அவரை இயக்குனரும், தயாரிப்பாளரும் அவரை தொல்லை செய்தனர் அதனால் தான் அவர் அழுதார் என்று சர்ச்சைகள் கிலாமினாலும் கிளம்பலாம் என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.