கைதாகிறாரா செந்தில் பாலாஜி? சுப்ரீம் கோர்ட்டை நோக்கித் நகரும் அரசியல் களம்!

டாஸ்மாக் மற்றும் குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு தீவிரமாகும் சட்டச் சிக்கல்கள்!

By S.Dhilip Kumar · 31/7/2026

தமிழக அரசியலில் தொடர்ச்சியாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்டப் போராட்டங்கள், தற்போது உச்சகட்ட நிலையை எட்டியுள்ளன. டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு வழக்கில் அவரது முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், மற்றொரு புறம் 'குதிரை பேர' வழக்கு விசாரணையும் அவரைத் தீவிரமாக நெருக்கி வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் தள்ளுபடியும் கைது அச்சமும்

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், பார்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு, கட்டண வசூல் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்தது.

குதிரை பேர வழக்கு: கழுத்தை நெரிக்கும் அடுத்த கட்ட விசாரணை!

டாஸ்மாக் வழக்கு ஒருபுறமிருக்க, அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிய சட்டமன்ற உறுப்பினர் "குதிரை பேர" (Horse-Trading) வழக்கும் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

அடுத்தகட்ட சட்டப் போராட்டம்

தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்ய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் காவல் துறையின் தீவிரத் தேடுதல் வேட்டை, மறுபுறம் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு, இன்னொரு புறம் குதிரை பேர வழக்கின் தினசரி விசாரணை என செந்தில் பாலாஜியைச் சுற்றி பின்னப்பட்டுள்ள சட்ட வலைகள், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full