மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் சமீபத்தில் துவங்கிய “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் இத்தனை நாடகத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. ஆகவே சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு உள்ளார். எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில்ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் படுக்கையில் புடவையில் படு கவர்ச்சியான போஸ்களை கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தர்ஷா. நேற்று தான் இதே புடவையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் தர்ஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படங்கள் தான் இவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா வா இது!! என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் தற்போது ஒரு சீரியலில் நடித்து கொண்டிருப்பதாலும், இது வரை யாரும் சீரியலில் பயன்படுத்தாத காஸ்டியூமை அந்த சீரியலில் பயன்படுத்தப் போவதாகவும் கூறினார்.

Advertisement
Advertisement