தொலைக்காட்சி தொடர்களில் தனது வில்லித்தனமான நடிப்பு மூலம் 10 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. ‘இந்தப் பொண்ணுகிட்ட எவ்வளவு வில்லத்தனம் பாரேன்’ எனப் பேசாத வாய் அரிது. தற்போது, சீரியலுக்கு பிரேக் கொடுத்திருக்கும் இவர், தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், சீரியலில் இருந்து விலகியது கொஞ்சம் வருத்தம்தான். மக்களை தினமும் அவர்களுடைய வீட்டில் சீரியல்கள் மூலமாகப் போய்ப் பார்த்த எனக்கு, பிரேக் எடுத்திருப்பது கஷ்டமாதான் இருக்கு. அதுக்குப் பதிலாதான் இப்போ டைரக்‌ஷன்ல இறங்கிட்டேன்.

Advertisement

இதுவரை 15 கன்னடப் படங்களில் நடிச்சிருக்கேன். எங்கள் குடும்பம் மொத்தமும் சினிமாவில் இருக்கிறோம். அதனால, எனக்கு சினிமா பற்றிய புரிந்துணர்வு அதிகம். அதனாலதான், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளேன் என்று குறியுளளார் பூஜா.

Advertisement