கோலி சோடா நடிகர் கிஷோர்-ப்ரீத்தி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு - குவியும் வாழ்த்துக்கள்
கோலி சோடா நடிகர் கிஷோரின் மனைவி ப்ரீத்திக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ல் வெளியான “பசங்க” திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார். இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை தான் காட்டப்படும்.
இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கிஷோர்.
இதனை தொடர்ந்து இவர் கோலி சோடா, வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர் போன்ற பல தமிழ் படங்களிலும், துரோகி,புள்ளி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். குழந்தை பருவத்தில் வெளிவந்த இவரின் படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. தற்போதும் இவர் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார்.
கிஷோர்- ப்ரீத்தி காதல் :
இதற்கிடையில் நடிகர் கிஷோர் அவர்கள் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” என்ற சீரியலின் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி குமார் . பின் இவர் `லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, ப்ரியமானவளே, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருந்தார். அதன் பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து இருந்தார்.
நடிகை ப்ரீத்தி குமார்-கிஷோர் திருமணம்:
பின் கிஷோர்- ப்ரீத்தி குமார் இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய காதலை இணையத்தில் தெரிவித்து இருந்தார்கள். உடனே, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அதோடு கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சோசியல் மீடியாவிலும் சர்ச்சை எழுந்து இருந்தது. இருந்தாலுமே இருவரும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
ப்ரீத்தி வளைகாப்பு:
மேலும், திருமணத்திற்கு பிறகு பிரீத்தி குமார் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் புனிதா என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சில மாதங்களுக்கு முன் தான் ப்ரீத்தி குமார்- கிஷோர் இருவருமே பெற்றோர்கள் ஆகி இருக்கும் தகவலை கூறியிருந்தார்கள். அதன் பின் கிஷோர் தன்னுடைய மனைவி பிரீத்திக்கு வளைகாப்பை எளிமையாக நடத்தி இருந்தார். இவரின் வளைகாப்புக்கு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.
பிரீத்தி-கிஷோர் குழந்தை:
இந்நிலையில் ப்ரீத்தி- கிஷோர் ஜோடிக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய மகனுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்ட்டாவில் ப்ரீத்தி- கிஷோர் பகிர்ந்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.