மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், அவருக்கு பின்னர் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தது என்றால் அது நடிகை ஷிவானி நாராயணன் தான். விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி.விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தினமும் மாலை சரியாக 5 மணி ஆனால் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இவர் 5 மணிக்கும் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாக இருந்தது. இதனால் இவருக்கு அஞ்சுமணி குயின் அஞ்சுமணி வண்டி என்று ரசிகர்கள் பட்டப் பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். மேலும், அடிக்கடி உள்ளாடை மட்டும் அணிந்து புடவையில் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வருகிறார்.

ஆனால், சமீப காலமாகவே 4 மணிக்கு டான் என்று புகைப்படத்தை வெளியிட்டு விடுகிறார். இந்த நிலையில் இன்றும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஷிவானி. அதில் கிழிந்த பேண்ட்டை அணிந்து முறுக்கி கட்டிய டி-ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ளார். வழக்கம் போல இந்த புகைப்படத்திற்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Advertisement
Advertisement