கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியன் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார் ஸ்வேதா.

Advertisement

அதைத்தொடர்ந்து சின்னத்தம்பி வள்ளி கார்த்திகை பெண்கள் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்வேதா இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தற்போது அறிவித்திருக்கிறார் ஸ்வீதா. ஸ்வேதாவின் காதலரான அருண் என்பவருடன் தான் சுவேதாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 3) ஸ்வேதா மற்றும் அருண் தம்பதிக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்வேதா. மேலும், இவர்களது திருமணம் நாளை (செப்டம்பர் 4) நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement