திரௌபதி, மண்டேலா போன்ற படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார், தனது கணவரை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சீலா ராஜ்குமார். இவர் நடிகை மட்டுமில்லாமல் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுபிள்ளை போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். சொல்லப்போனால் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்தது என்றே சொல்லலாம். இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி படத்தில் சீலா நடித்து இருந்தார். ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து இருக்கிறார்கள் என்று பயங்கர சர்ச்சையும் வெடித்தது. இதனை தொடர்ந்து ஷீலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த மண்டேலா படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்திலும் இவரது நடிப்பு பல பாராட்டுகளை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ஜோதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், சிங்கிள் என்று தான் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றுவிட்டது என்பது பலர் அறியாத விஷயம்.

Advertisement

அவருக்கு கடந்த 2014ம் ஆண்டே திருமணமாகிவிட்டது. அதுவும் கடல் நடுவே மாலை மாற்றி படு வித்யாசமாக ஷீலா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவரது குறும்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இவர்கள் காதலுக்கு இவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

Advertisement

இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து இருந்தார்கள்.இப்படி ஒரு நிலையில் தனது கணவரை பிரிந்துவிட்டதாக ஷீலா தனது சமூக வலைதளத்தில் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்’ என்று குறிப்பிட்டு தனது கணவர் சோழனை டேக் செய்து இருக்கிறார். ஆனால், இவர்கள் விவாகரத்துக்கான காரணம் தெரியவில்லை.

Advertisement