விஜய் தொலைக்காட்சியில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் கடந்த மாதம் தொடங்கியது. இந்த தொடரில் நடித்து வந்த ஷிவானி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். என்ன காரணமாம்? ஷிவானி தரப்பில் பேசிய போது, வெளியேறியதை மட்டும் ஒப்புக் கொண்டு ‘கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசுகிறோம்’எனச் கூறியுள்ளார்.

Advertisement

ஆனால், ஷிவானி வெளியேறியதற்கு சில காரணங்கள் இருப்பதாக கடைக்குட்டி தொடர் செட்டில் சிலர் சிலவற்றை கூறியுள்ளனர். அதில்,
 ‘பகல் நிலவு’ தொடர் வெற்றிகரமாக ஓடி முடிந்தது. ஆனால் அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போதே இரண்டு மெயின் ஜோடிகள் வெளியேறினர். அப்போது முதல் அதில் நடித்து வந்த அசீம் – ஷிவானி ஜோடிக்கு முக்கியத்துவம் கிடைத்தது. 

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement
Advertisement