நடிகை ஷ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

தனது 35 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடி வந்தார். இதனால் நடிகை ஷ்ரேயா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர்.

Advertisement

ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா திருமணம் ஆன பின்னர் கூட கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஷ்ரேயா அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் திருமணத்திற்கு பின்னரும் இப்படியா என்று புலம்பி வருகின்றனர்.

Advertisement
Advertisement