சிவாஜி படத்தின் படபிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் சொன்னது குறித்து ஸ்ரேயா சரண் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார்.

இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்படி தொடர்ந்து படங்களில் நடித்த ஸ்ரேயாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

Advertisement

ஸ்ரேயா திருமணம்:

பின் ஸ்ரேயா திடீரென்று ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டிலே ஸ்ரேயா செட்டில் ஆனார். பின் இவர் தனக்கு குழந்தை பிறந்து இருக்கு என்று திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார் . ஆனால், ஸ்ரேயா கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார்.

ஸ்ரேயா கம்பேக்:

மேலும், தன் பெண் குழந்தைக்கு “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று ஸ்ரேயா பெயர் வைத்திருக்கிறார்.
குழந்தை பிறந்த பிறகு ஸ்ரேயா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கப்ஸா. கன்னடத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தை ஆர் சந்துரு இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து சமீபத்தில் ஸ்ரேயா நடிப்பில் ஓடிடியில் வெளியான தொடர் ஷோ டைம்.

Advertisement

ஸ்ரேயா நடிக்கும் படங்கள்:

Advertisement

இந்த தொடரை மிஹிர் தேசாய் மற்றும் அர்ச்சித் குமார் இயக்கி இருக்கிறார். இதில் இம்ரான் ஹாஷ்மி, நசிருதீன் ஷா, மௌனி ராய் மற்றும் மஹிமா மக்வானா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தற்போது ஸ்ரேயா அவர்கள் விமல் நடிப்பில் ஆர் மாதேஷ் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நரகாசுரன் என்ற படத்திலும் நடித்த வருகிறார். இந்த படங்கள் இரண்டுமே இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து ஸ்ரேயா கூறியது, சிவாஜி படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி சார் என்னை பார்த்து, நீங்க இப்போது நன்றாக இருக்கிறீர்கள்.

ரஜினி சொன்ன அறிவுரை:

இப்போது போலவே எப்போதும் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஆனால், வருங்காலத்தில் உங்களுடைய வாழ்க்கையில் தோல்வி வரலாம். நீங்கள் முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் தோல்வி வரலாம். அப்போதும் நீங்கள் இதே மாதிரி எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அந்த அன்பின் மூலம் மக்கள் உங்களுக்கு உதவுவார்கள். எப்போதும் மக்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருங்கள் என்று கூறியிருந்தார். அந்த படத்தில் அனுபவம், ரஜினி சார் சொன்ன அறிவுரையும் என்னைக்கும் நான் பாலோ செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement