14 ஆண்டுகளுக்கு முன்னர் கமல் கூறிய கருத்திற்கு படக்குழுவினர் தற்போது அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரையரங்கில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

Advertisement

படத்தின் கதை:

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. நான்காண்டுகளுக்கு பின் கமல் கம்பேக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் மோசமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவரை அடுத்து அமர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார்.

Advertisement

விக்ரம் படம் குறித்த தகவல்:

படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.மேலும், இந்த படம் குறித்து பலரும் நல்லவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன் கமல் கூறிய கருத்திற்கு மாயோன் படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்து இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

கமல் கூறிய கருத்து:

அதாவது விக்ரம் படம் திரையிடப்பட்ட பல திரையரங்களில் சிபிராஜ் நடித்த மாயோன் திரைப் படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது. கமலஹாசன் நடித்த தசாவதாரம் என்ற படத்தில் கடவுள் இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொல்கிறேன் என்ற வசனம் கமல் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. இந்த கருத்துக்கு தற்போது மாயோன் படக்குழுவினர் பதில் தெரிவித்துள்ளனர். அதாவது இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது,

மாயோன் படம் கொடுத்த பதில்:

தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று கமல் பேசிய இந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு மாயோன் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் மாயம் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் மாயோன். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement