கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படத்தில் நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்திருப்பார்.

Advertisement

மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து பேசிய இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இயக்குனர் கோபியின் முதல் படமான இது அவருக்கு நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆஹி பிஸியாக உள்ளார். இந்நிலையில் தற்போது அறம்-2 பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன. அறம்-2 பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது.

Advertisement

Advertisement

அறம்-2 கண்டிப்பாக எடுப்போம். ஆனால் அறம்-2 கதைக்களம் வேறு விதமாக இருக்கும். தற்போது நயன்தாரா பிஸியாக உள்ளார். அவர் கால்ஷீட் கொடுத்தவுடன் அறம்-2 வேலை துவங்கும்.

மேலும் அறம்-2 படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Advertisement