நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு வசீகரமான முகம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் சில்க். இவருடைய இயற்பெயர் விஜயலஷ்மி. இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார்.

பின் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நடிகையாக சில்க் அறிமுகமானார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்து இருந்தார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

சில்க் ஸ்மிதா திரை பயணம்:

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதோடு இப்படி ஒரு நடிகையும் இருப்பாரா! என்று அன்றைய கால பிரபலங்களும், மக்களும் விரும்பி வியந்து பார்க்க வைத்த நடிகை சில்க். இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். அதிலும் சில படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து சிலர் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.

சில்க் ஸ்மிதா தற்கொலை:

மேலும், அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் இவருடைய நடிப்பை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்கள். பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Advertisement

மார்க் ஆண்டனி படம்:

சமீப காலமாகவே சில்க் குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் சில்க் மாதிரி இருக்கும் ஒரு பெண் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே உண்மையான சில்க் தான் என்று உற்சாகமடைந்திருந்தார்கள். இந்த நிலையில் சில்க் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

சில்க் கடித்த ஆப்பிள்:

அதாவது, ஒரு படப்பிடிப்பின் போது சில்க் ஆப்பிள் சாப்பிட்டிருந்தார். அப்போது அவர் ஆப்பிளை கடித்து அருகில் வைத்திருந்தார். அங்கிருந்த ஒருவர் அவருக்கே தெரியாமல் எடுத்து சென்றிருக்கிறார். பின் அந்த ஆப்பிளை அவர் ஏலம் விட்டு இருக்கிறார். அந்த ஏலத்தில் ஸ்மிதா கடித்த ஆப்பிள் 1 லட்சம் ரூபாய் வரை போனதாம். இந்த தகவலை அந்த புகைப்படத்தை எடுத்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி தெரிவித்து இருந்தார்.

Advertisement