கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார் நடிகர் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

Advertisement

“மாநாடு” தற்போது சுந்தர் சி இயக்கத்தில் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ள “எனை நோக்கி பாயும் தோட்ட” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மேகா ஆகாஷ் தான் சிம்பு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த படப்பிடிப்பில் சண்டை மற்றும் பாடல் காட்சிகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம்.

Advertisement