ஓடும் MTC பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்..!புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!

By Rajkumar · 1/12/2018
தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் முன்பு சுய இன்பம் கண்ட நபரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினமயி. அந்த புகைப்படத்தை ஒரு பெண் அனுப்பியதாகவும் இதுபோன்ற புகைப்படத்தை எடுக்க ஒரு சில பெண்களுக்கு தைரியம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை அனுப்பியுள்ள பெண் கூறியிருப்பதாவது, நவம்பர் 29 ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் நான் mtc பேருந்தில் சோளிங்கநல்லூருக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது எனக்கு நேரான சீட்டில் அமர்ந்திருந்தவர் என்னை பார்த்துக்கொண்டே இருந்தார். பெண் என்றால் பார்க்கத்தானே செய்வார்கள் இதெல்லாம் சாதாரணமான விடயம் தான் என்று நான் பொருட்படுத்தவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் பெருந்திற்குள்லேயே சுய இன்பம் செய்து வந்தார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன் பின்னர் நான் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு பேருந்தின் முன் இருக்கையில் சென்று விட்டேன். சிறுது நேரத்திலேயே அந்த நபர் காணாமல் போய் விட்டார் என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full