விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தற்போது சென்றுகொண்டு இருக்கும் கதையின் கனடாவில் இருந்து சென்னை வந்துள்ள ஜீவா முத்துவின் காரிலேயே பயணித்து கொண்டு இருக்கிறார். அப்போது முத்து ஜீவாவிடம் சொல்லி கோயிலுக்கு செல்கிறார். அப்போது ஜீவா காரிலேயே இருக்கிறார். பின்னர் மனோஜ் போன் வர, கோவிலுக்கு வெளியில் வந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது அவரை கண்ட ஜீவா, அதிர்ச்சியடைந்து தனது முகத்தை மூடிக்கொண்டு மறைகிறார். ஆனாலும் தனது வரை மனோஜ், ஜீவாவை பார்க்கவில்லை. இறுதியில் முத்து வந்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஜீவா. இப்படி ஒரு நிலையில் மனோஜின் மனைவி ரோகினியின் பார்லர் என்று தெரியாமல் ஜீவா சென்று இருக்கிறார். அவரை கண்ட ரோகினி, உடனே மனோஜிற்கு போன் செய்கிறார்.

Advertisement

இதனை கேட்ட மனோஜ் ஒருகணம் அதிர்ச்சி அடைந்து உடனே பார்லருக்கு புறப்படுகிறார். அங்கே சென்ற மனோஜ், ஜீவாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ஜீவாவை மடக்கி வைத்து ‘திருடி உனக்கு என்னடி மரியாதை, பணத்தை கொடு என்று வெளுத்து வாங்குகிறார் ரோகினி.இதனை தொடர்ந்து பணத்தை ஏமார்ந்து இத்தனை நாட்களாக ஜீவா மீது கொலவெறியில் இருந்த மனோஜ், நீயெல்லாம் ஒரு பொண்ணா, உன்னை எல்லாம் சும்மா விட கூடாது என்று ஜீவாவின் கழுத்தை நெரித்தார்.

பின்னர் அவரை ரோகினி சமாதானம் செய்தார். பின்னர் பணத்தை கேட்டதற்கு 6 மாசம் என்னுடன் வாழ்ந்ததற்கு சரியா போச்சி என்று திமிராக பேசுகிறார் ஜீவா. பின்னர் மனோஜ் போலீசுக்கு போன் செய்கிறார். போலீஸ் வந்து அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர். மேலும், நேற்று எபிசோட்டில், போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ்- ரோகினி ஜீவா மீது புகார் கொடுக்கிறார்கள். போலீசும் ஜீவாவிடம் பணத்தை கொடுக்க வேண்டும் கேட்கிறார்கள்.

Advertisement

ஆனால், ஜீவா கொடுக்க முடியாது என்று தன்னுடைய லாயரை வைத்து பேசுகிறார். கடைசியில் ஜீவா, மனோஜிடம் இருந்து திருடி சென்ற பணத்தை கொடுத்துவிடுகிறார்.ஜீவாவிற்கு ஜாமீன் கொடுப்பதற்காக முத்து, ஜீவாவிற்கு சாட்சி கையெழுத்து முத்து போட்டு விடுகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மீனா தான் மனோஜுக்கு பார்த்த பெண். இவர்கள் ரிஷப்ஷனில் ஜீவா கலந்துகொண்டு இருப்பார்.

Advertisement

அப்போது மீனா இவரை பார்த்திருப்பார். அப்படி இருக்க மீனாவிற்கு எப்படி ஜீவாவை அடையாளம் தெரியாமல் இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல மனோஜ், மீனா ரிஷப்ஷனில் ஜீவா கலந்துகொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். ஒருவேளை ஜீவாவை மீனா மறந்துவிட்டாரா? இல்லை ஜீவா வேறு ஹேர் ஸ்டைலில் இருப்பதால் அடையாளம் கண்டுபிடிக்கவில்லையா? இல்லை இயக்குனர் இந்த லாஜிக்கை மறந்துவிட்டாரா?

Advertisement