மீனாவிடம் இருந்து தப்பித்த மலேசியா மாமா, முத்துக்கு எழும் சந்தேகம், ரோகினி சிக்குவாரா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 21/6/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்து முத்து வீட்டிற்கு வந்தார்கள். இதனால் பல ப்ரச்சனை வந்தது. ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தெரிந்து விட்டது.

சிறகடிக்க ஆசை:

அதன் பின் முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசியதை கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இது தான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்தார். அதன் பின் ரோஹிணிக்கு தொல்லை கொடுத்த வசீகரனை போலீஸ் கைது செய்கிறது. பின் ரோகினி கொடுத்த ஐடியா படி விஜயா, பரதநாட்டிய வகுப்பை தொடங்குகிறார். அதற்கு முத்து கிண்டலாக பேசியிருந்தார். நேற்றைய எபிசோடில் விஜயா ஆரம்பித்த வகுப்பிற்கு யாருமே வரவில்லை. இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்து விஜயா, யாருமே வரவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

பின் முத்து- மீனா இருவருமே விஜயாவின் வகுப்பிற்கு மாணவர்களாக செல்கிறார்கள். மீனாவிற்கு நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கும்போது விஜயாவிற்கு கழுத்து சுழுக்கி விடுகிறது. இதுவும் உன் வேலைதான் என்று மீனாவை விஜயா திட்டுகிறார். பின் ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த நபரை மீனா பார்த்து விடுகிறார். உடனே அவர் தப்பித்து செல்ல மீனாவும் விடாமல் துரத்திக் கொண்டே போகிறார். கடைசியில் அவர் ரோகினியின் கடைக்குள் சென்று விடுகிறார்.

நேற்று எபிசோட்:

அவரை ஒரு பிரிட்ஜில் ரோகினி தோழி மறைத்து வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம், முத்துவின் நண்பன் செல்வத்திற்கு பிரிட்ஜ் வேணும் என்பதால் மனோஜ் கடைக்கு வருகிறார். அந்த சமயம் மீனாவும் வருவதால் இருவருமே உள்ளே வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மலேசியா மாமா இருக்கும் பிரிட்ஜ் வேணும் என்று செல்வம் சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

உடனே நான் வாங்குகிறேன் என்று ரோகினியின் தோழி சொல்லி எப்படியோ சமாளித்து அவர்களை அனுப்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மீனா, நான் ரோகினியின் மாமாவை பார்த்தேன். அவர் என்னை பார்த்து பயந்து ஓடினார் என்று சொல்கிறார். இதை எல்லாம் ரோகினி ஒழிந்து நின்று கேட்டுக்கொண்டு பயப்படுகிறார். முத்துவிற்கும் ரோகினி மீது சந்தேகம் வருகிறது. இனி வரும் நாட்களில் மலேசியா மாமா உண்மையை முத்து கண்டுபிடிப்பாரா? ரோகினி முத்துவிடம் சிக்குவாரா? போன்ற பரபரப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full