விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். பின் ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள். பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார்.

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார் சிட்டி. அந்த வீடியோவை மீனாவின் தம்பி சத்யா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பிக்கிறார். அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். பின் முத்துவை போலீஸ் மடக்கி காரை எடுத்து செல்கிறார்கள். முத்து தன் மீது தவறு இல்லை என்று எவ்வளவோ போராடியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் எல்லோருமே முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, முத்துவை அடித்து விடுகிறார்.

சீரியல் கதை:

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுகிறார். ஆனால், எந்த போலீஸ்மே அவர் சொல்வதை கேட்கவில்லை. கடைசியில் மீனா சிசிடிவி பதிவுகளை செக் பண்ணி பார்க்கிறார். அப்போது முத்து குடிக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதை செய்தது சிட்டி தான் என்று கண்டுபிடிக்கிறார். இதை அவர் போலீஸில் காண்பித்து முத்துவை காப்பாற்றி வண்டியை மீட்கிறார். மேலும், இந்த உண்மையை சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார்கள். இதை பார்த்து அண்ணாமலை அழுகிறார்.

Advertisement

நேற்றைய எபிசோட்:

நேற்றைய எபிசோட்டில் முத்துவின் மொத்த குடும்பமும் மனோஜ் வேலைக்கு பர்னிச்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கு மனோஜ் ஓனர் உட்காரமிடத்தில் உட்கார்ந்து எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார். பின் ரோகினி- மனோஜ் இருவரும் தங்களுடைய கடைக்கு பெயர் வைப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி, அத்தை பெயரை வைக்கலாம் என்று சொல்கிறார். மனோஜ், வேணாம் உன்னுடைய அப்பா பெயர் வைக்கலாம் என்று சொல்கிறார். இன்றைய எபிசோடில் முத்துவின் கல்யாண நாளுக்காக அவருடைய பாட்டி ஊரிலிருந்து வருகிறார்.

Advertisement

சீரியல் ப்ரோமோ:

எல்லோருமே முத்து கல்யாண நாளை கொண்டாட நினைக்கிறார்கள். வழக்கம் போல் விஜயா, ரோகினி மட்டும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், முத்து-மீனா திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார். இன்னொரு பக்கம் சிட்டி வெளியே வந்ததால் அவருக்காக சத்யா மாலை அணிவிக்கிறார். உடனே சிட்டி, இன்று உன்னுடைய அக்கா அம்மாவோட கல்யாண நாள். அதை சிறப்பாக கொண்டாடு என்று சொல்லி அனுப்புகிறார். இதனால் சத்யா காஸ்ட்லி கிப்ட் உடன் முத்துவை பார்க்க வருகிறார். இதை பார்த்த முத்து கோபப்பட்டு நிற்கிறார். இனி வரும் நாட்களில் முத்து, சத்யாவிடம் கிஃப்ட் வாங்குவாரா? இதனால் நடக்கும் கலவரம் என்ன? முத்து- மீனா இடையே பிரச்சனை உருவாகுமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement