தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ‘அந்த படம்’ என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறி உள்ளார். இதைக்கேட்டு ரசிகர்கள் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதாக தகவல் வந்தது. மேலும், சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது உள்ள நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோ என்று பேர் வாங்கியவர். ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய துறு துறுப்பான நடிப்பும், நகைச்சுவை கலந்த பேசும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து உள்ளது. மேலும் ,சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் “நம்ம வீட்டு பிள்ளை”. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரவிகுமாருடன் எஸ் கே

Advertisement

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். மேலும், சமீப காலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வியில் இருந்தது. மேலும், இதை முறியடிக்கும் வகையில் இந்த படம் அமைந்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் “ஹீரோ” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது ஒரு படத்திற்கு சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தெரிய வந்து உள்ளது. இனிமேல் ‘இந்த படம்’ என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : மீண்டும் படு ஸ்லிம்மாக மாறிய மீரா ஜாஸ்மின். ப்பா என்ன ஒரு மாற்றம்.

இதைக்கேட்டு ரசிகர்கள் மற்றும் படக்குழு மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் அவர்கள் இயக்கும் படம் “சயின்ஸ் பிக்சன்” தான். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்று விட்டது. மேலும், இந்தத் திரைப்படத்திற்காக எனக்கு சம்பளம் வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும். ஜனவரி மாதம் மீண்டும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் அடுத்த வருடம் கண்டிப்பாக திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement

Advertisement

மேலும், ஹீரோ படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஹீரோ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் சில காலமாகவே பட்ஜெட் பிரச்சனையில் இருந்ததாகவும் இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது. மேலும், இந்த படத்தை டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வந்துள்ளது.

Advertisement