ரஜினியால் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:

மேலும், டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.

மாவீரன் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் தான் அறிவித்திருக்கிறது.

Advertisement

மாவீரன் படம் ரீலிஸ் தேதி:

இந்த நிலையில் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நேற்று தான் அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆகவே, ஜெயிலர் படமும், மாவீரன் படமும் ஒரே வாரத்தில் வெளியாக இருக்கிறது.

Advertisement

ஜெயிலர் படம் குறித்த தகவல்:

இதனால் இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவ இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு இரண்டு படங்களுடைய வசூலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சனைக் காரணமாக தான் சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு முடிவு செய்திருக்கிறார். அதாவது, மாவீரன் படத்தை ஜூலை மாதமே வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீது இருந்த பயத்தால் சிவகார்த்திகேயன் இந்த முடிவு எடுத்தாரா? அவருடைய தீவிர ரசிகன் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement