தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் சிவாகார்த்திகேயன். அவரது கடைசி படம் வேலைக்காரன் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தற்போது தனது 13ஆவது படத்திற்கு தயாராகி உள்ளார் சிவா.
இந்த படம் ஒரு அறிவியலை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு புனைகதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தினை 24AM STUDIOS தயாரிக்கிறது. இந்த அறிவிப்பினை இன்று மதியம் வெளியிட்டது அந்த தயாரிப்பு நிறுவனம். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது.