வரலட்சுமி சரத்குமாரிடம் எஸ் ஜே சூர்யா மன்னிப்பு கேட்டிருக்கும் காரணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றி இருந்தார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருந்தார் எஸ் ஜே சூர்யா.

அதன் பின்னர் இவர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார். வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஐய்யை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார்.

Advertisement

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். அதிலும் இவர் நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்று இருந்தது.

எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:

பின் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகி உள்ள இறவாக்காலம் படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்கள் பொம்மை, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படம் என்று பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் இடம் மன்னிப்பு கேட்டு எஸ். ஜே. சூர்யா பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

எஸ் ஜே சூர்யா டீவ்ட்:

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மாநாடு படத்தினை பற்றியும், எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை பற்றியும் பாராட்டி ட்விட் ஒன்று போட்டு இருந்தார்.

Advertisement

மன்னிப்பு கேட்ட காரணம்:

தற்போது இதை எஸ் ஜே சூர்யா தனது டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இத்தனை நான் எப்படி பார்க்காமல் விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களும் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்! டைம் லூப்பில் ஏதாவது மாட்டி விட்டீர்களா? என்று ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement