தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாஹா வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார்.
ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் பின் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நூலகம் ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த சினேகன் தற்போது பணங்காட்டு நரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் பாபு இயக்குகிறார்.